ADDED : அக் 14, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உலக மனநல தினத்தை முன்னிட்டு, ஒலாந்தரியா நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கம்பன் கலையரங்கில் துவங்கிய ஊர்வலத்தை ஒலாந்தரியா இயக்குநர் செந்தில்குமரன், துணை தலைவர் அர்னா தெப்ளிக் துவக்கி வைத்தனர். ஒலாந்தரியா மற்றும் ஐரோப்பிய தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் கடற்கரை காந்தி திடலை அடைந்தது.
அங்கு, போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.