ADDED : ஜன 13, 2026 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் பஞ்சாயத்து மகளிர் கூட்டமைப்பு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில் பெண்கள் கலந்து கொண்டு, பாலின சமத்துவம் குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலின விழிப்புணர்வு அடங்கிய பதாதைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
தொடர்ந்து பாலின சமத்துவம் குறித்து பெண்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
ஏற்பாடுகளை கிராம சேவக் செந்திலரசு, மலர்கொடி, சமூக வல்லுனர் சாந்தி, கணக்காளர் நதியா, தலைவர் சரளா, உறுப்பினரகள் ரஞ்சிதா, முத்துலட்சுமி, செங்கேணி ஆகியோர் செய்திருந்தனர்.

