ADDED : அக் 01, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் போலீஸ் சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் பேசுகையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், குற்றச் சம்பங்களை தடுக்க பொதுமக்கள் வழங்கவேண்டிய ஒத்துழைப்புகள் குறித்து பேசினார்.
சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் பேசுகையில், போக்சோ சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், மூத்த குடிமக்கள் சட்டம் குறித்து பேசினார்.