ADDED : ஜன 16, 2025 06:12 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கடற்கரை சாலையில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு தெரு முனை நாடகம் நடந்தது.
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுங்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி, இந்தாண்டு ஜனவரி மாதம் முழுதும் புதுச்சேரியில் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி முதல் தொடர்ச்சியாக சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று கடற்கரை சாலை, காந்தி சிலை எதிரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தெருமுனை நாடகம் நடந்தது. போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
