ADDED : ஜூலை 13, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காலாப்பட்டு எம்.ஓ.எச்., பாரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் சார்பில், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் கல்பனா 'மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவிகளுக்கு பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். ஆசிரியர் ரமாதேவி நன்றி கூறினார்.