நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : குருசுகுப்பம் என்.கே.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தேசிய செயல் திட்டத்தின் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓவியப் போட்டி நடந்தது.
பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு பற்றி மாணவிகள் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
பேரணியை பள்ளி துணை முதல்வர் அகஸ்டின் துவக்கி வைத்தார். பேரணி, குருசுக்குப்பம் சமூதாய நலக்கூடத்தில் துவங்கி, மாரியம்மன் கோவில் வீதி வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தனர்.
பின்னர், பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஓவியப்போட்டியில் சிறந்த ஓவியம் வரைந்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சமூக நலத்துறை, போதை ஒழிப்பு திட்ட அதிகாரி விஜயன், விரிவுரையாளர்கள் அருள்பிரகாஷ், பிந்து உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

