/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதா கங்காதரன் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
சாரதா கங்காதரன் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சாரதா கங்காதரன் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சாரதா கங்காதரன் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : பிப் 14, 2026 04:34 AM

புதுச்சேரி: சாரதா கங்காதரன் கல்லுாரியில் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, வந்தே மாதரம் விக்சித் பாரத் யுவா கனெக்ட் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் ஆதித்யகுமார் சிங் கலந்து கொண்டு இளைஞர்களின் கடமைகள், சமூகப் பொறுப்புகள் மற்றும் தேச வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு குறித்து பேசினார். கல்லுாரியின் துணைத் தலைவர் பழனிராஜா, முதல்வர் பாபு வாழ்த்தி பேசினர்.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும், 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை வலுவான முன்னேறிய நாடாக மாற்றவும், கல்லுாரி மாணவர்களுக்கிடையே பொறுப்புணர்வை வளர்க்கும் விதமாகவும் நடந்த கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி சீனு செய்தார். தண்டபாணி நிகழ்வினை ஒருங்கமைத்து நடத்தினார்.

