/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கருத்தரிப்பு தொழில்நுட்ப மையம் ;கவர்னர் கைலாஷ்நாதன் திறப்பு
/
கருத்தரிப்பு தொழில்நுட்ப மையம் ;கவர்னர் கைலாஷ்நாதன் திறப்பு
கருத்தரிப்பு தொழில்நுட்ப மையம் ;கவர்னர் கைலாஷ்நாதன் திறப்பு
கருத்தரிப்பு தொழில்நுட்ப மையம் ;கவர்னர் கைலாஷ்நாதன் திறப்பு
ADDED : பிப் 14, 2026 04:34 AM

புதுச்சேரி: ராஜிவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அதிநவீன உதவி கருத்தரிப்பு தொழில்நுட்ப மையத்தை கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்.
உதவி கருத்தரிப்பு தொழில்நுட்ப மையத்தில் ஒவ்வொரு தம்பதியின் கருத்தரிப்பு குறைப்பாட் டுக்கான காரணங்களை ஆராய்ந்து பிரத்யேக சிகிச்சை வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்டு, சேவைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கபடுகிறது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சுகாதாரத்துறை இயக்குநர்கள் ரகுநாதன், ஆத்மலட்சுமி, ஷமி முனிசாபேகம், ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியா, மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத், கருத்தரிப்பு மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி சத்திய நாராயணன், மருத்துவமனையின் அனைத்து துறை தலைவர்கள், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

