sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் பாகூர் எம்.எல்.ஏ., ஆலோசனை

/

உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் பாகூர் எம்.எல்.ஏ., ஆலோசனை

உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் பாகூர் எம்.எல்.ஏ., ஆலோசனை

உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் பாகூர் எம்.எல்.ஏ., ஆலோசனை


ADDED : நவ 08, 2024 05:14 AM

Google News

ADDED : நவ 08, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி உள்ளாட்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, துறையின் இயக்குனர் சக்திவேல், துணை இயக்குனர் ரத்னா, கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், பாகூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, உள்ளாட்சித் துறை, கொம்யூன் பஞ்சாயத்து, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்யப்பட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதில், புதிய நகர்களுக்கு பொது குடிநீர் குழாய் அமைத்தல், தெரு மின் விளக்கு, சாலை மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை பணிகளை விரைந்து முடிக்கவும், 2023 - -24ம் நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளை காலதாமதமின்றி விரைவாக முடிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us