/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர் போலீசார் வழக்கு பதிவு
/
அனுமதியின்றி பேனர் போலீசார் வழக்கு பதிவு
ADDED : ஏப் 14, 2025 04:14 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், போக்குவரத்து இடையூராக பேனர்கள், கட் அவுட் வைப்பது குறைந்ததாக தெரியவில்லை.
நேற்று முன்தினம் இ.சி.ஆர்., மடுவுபேட் சாலை சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில், அனுமதியின்றி பேனர் வைத்த அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

