/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணி
/
கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணி
ADDED : மார் 12, 2026 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: யோட்டோ பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி நகராட்சி இணைந்து கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.
இதில், லாஸ்பேட்டை தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த துாய்மை பணி டியூப்லக்ஸ் சிலை முதல் கார்கில் சிலை வரை உள்ள கடற்கரை முழுதும் கடந்த 10 நாட்களாக நடந்தது.
துாய்மை பணியில், 300 மூட்டை குப்பைகள் சேகரிக்கப்பட்டு, கடைசி நாளான நேற்று நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, யோட்டோ புவுண்டேஷன் மேலான் இயக்குனர் சதீஷ்குமார், நல அதிகாரி ஆர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

