/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'சிறந்த இணையர் விருது' தம்பதிகளுக்கு வழங்கல்
/
'சிறந்த இணையர் விருது' தம்பதிகளுக்கு வழங்கல்
ADDED : பிப் 03, 2026 04:49 AM

புதுச்சேரி: கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பில், 4ம் ஆண்டு ஆகச் சிறந்த அன்பின் இணையர் விருது வழங்கும் விழா தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.
சங்கத் தலைவர் முத்து, கிருஷ்ணவேணி தலைமை தாங்கினர். கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ராஜா, ரேகா நோக்கவுரை ஆற்றினர்.
முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மோகன், புதுச்சேரி அருங்காட்சியகம் நிறுவனர் அறிவன் வாழ்த்தி பேசினர்.
கலை முதியோர் இல்லம் நிறுவனர் கலைவாணி, இயற்கை ஆர்வலர் ஹேமலதா முன்னிலை வகித்தனர். தட்சஷிலா பல்கலைக்கழகம் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சாந்தி வரவேற்றார்.
விழாவில், 20 தம்பதிகளுக்கு ஆகச்சிறந்த அன்பின் இணையர் விருதுகள் வழங்கப்பட்டன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் தேவி தொகுத்து வழங்கினார்.
மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

