/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் போராட்டம்
/
பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் போராட்டம்
ADDED : செப் 25, 2024 11:11 PM

அரியாங்குப்பம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் பல்கலைக் கூட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலை கூட இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் நுண்கலைத்துறை மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று கல்லுாரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த போராட்டத்தில், கல்லுாரி நிர்வாகம் நுண்கலைத்துறையின் தனித்தன்மையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும். தொழில் நுட்ப கல்வியான நுண்கலைத்துறை படிப்பை, கலை மற்றும் அறிவியல் கல்வியாக மாற்ற கலைப்பண்பாட்டு துறை செயலர் தன்னிச்சையாக, புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட கடிதத்தை திரும்ப பெற வேண்டும்.
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையை இணைக்க வேண்டும். நுண்கலைத்துறை மற்றும் நிகழ்கலைத்துறையை இரண்டாக பிரிக்க வேண்டும். நுண்கலைத்துறைக்கு தனியாக முதல்வர் நியமிக்க வேண்டும்.
ஏ.ஐ.சி.டி.இ., மூலம் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் நுண்கலைத்துறை முதுகலை படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பின்னரே தேர்வு நடத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.