ADDED : பிப் 12, 2025 04:03 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : கருவடிக்குப்பம், நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன், 43; இ.சி.ஆரில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
கடந்த மாதம் 26ம் தேதி மாலை அவரது பைக்கை (பி.ஒய்.05.எல்.1487) ஒர்க் ஷாப் எதிரே நிறுத்திவிட்டு வெளியே சென்றார்.
பின் கடைக்கு வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அவரது புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
