ADDED : அக் 07, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; வீட்டு எதிரில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 35; இவர் கடந்த 29ம் தேதி, இரவு 10;00 மணிக்கு, தனக்கு சொந்தமான பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். மறுநாள் காலை எழுந்துவந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.