நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பைக் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாப்பாஞ்சாவடி, காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் இந்துகுமார், 34. இவர் தனது பைக்கை (பி.ஒய்.01.சி.எஸ்.9285) கடந்த 23ம் தேதி இரவு 7:00 மணியளவில் வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். அதிகாலை 5:00 மணியளவில் பார்த்த போது பைக் காணவில்லை. புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.