நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பைக் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வெட்டுக்காடு அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார், 25; தனியார் கம்பெனி ஊழியர்.
இவர் தனது விலை உயர்ந்த பைக்கை (பி.ஒய்.05.வி.இ.1112) கடந்த 25ம் தேதி, இரவு 7:00 மணிக்கு சேதாரப்பட்டில் உள்ள தனியார் கம்பெனி எதிரில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். பணி முடிந்து காலை 6:20 மணிக்கு வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.
புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வரகின்றனர்.

