நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பைக் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியகாலாப்பட்டு காந்தி நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 24; இவர் அதே பகுதியில் உள்ள சலுான் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 6ம் தேதி இரவு 11:00 மணியளவில், தனது பைக்கை (பி.ஒய்.05.யூ.1354) கடை எதிரில் நிறுத்தி விட்டு, வீட்டிற்கு துாங்க சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.