நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழ் அக்கரகாரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார், 28; தனியார் கம்பெனி ஊழியர். இவர், கடந்த நவம்பர் 2ம் தேதி, கடலுார் சாலையில் உள்ள மால் எதிரில், தனது பைக்கை நிறுத்திவிட்டு படம் பார்க்க சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

