ADDED : ஆக 26, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கோரிமேட்டை சேர்ந்தவர் விஜயன் மகன் பிரசன்னா,21; கோரிமேடு காமராஜர் சாலையில் உள்ள லாட்ஜில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 25ம் தேதி, லாட்ஜில் தங்கியிருந்த நபர், பிரசன்னாவின், பைக்கை பி.ஒய்.05.8932. ஓட்டிப் பார்க்க வேண்டும் என, கேட்டுள்ளார். அதனை நம்பிய பிரசன்னா, அவரிடம் பைக்கை கொடுத்தார். பைக்கை ஓட்டிச் சென்றவர் திரும்ப வரவில்லை.
பிரசன்னா புகாரின் பேரில், டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்னர். பைக்கை திருடியது சென்னை, அன்னை தெரசா நகரை சேர்ந்த அறிவழகன் என்பதும், அவர் மீது தமிழகத்தில் பல்வேறு பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
