பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் நைனார்மண்டபத்தில் பிரசாரம்
பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் நைனார்மண்டபத்தில் பிரசாரம்
ADDED : ஏப் 06, 2026 09:30 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: முதிலியார்பேட்டை தொகுதி, பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார், நைனார்மண்டபம் பகுதியில் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜ., சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஓட்டு கேட்கும் போது அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியின் குறைகளை தெரிவித்தனர். இதனை கேட்ட ஜான்குமார் நான் வெற்றி பெற்று இப்பகுதியில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து தருவதாக உறுதியளித்தார். அப்போது பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
