/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் நகரில் பா.ஜ., பொங்கல் விழா
/
காமராஜர் நகரில் பா.ஜ., பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2026 07:48 AM

புதுச்சேரி: காமராஜர் தொகுதி பா.ஜ., சார்பில் சாரம் அவ்வை திடலில் நடந்த பொங்கல் விழாவில் 108 பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பா.ஜ.,மாநில தலைமை சார்பில், 'தாமரை பொங்கல்' என்ற தலைப்பில் புதுச்சேரி மாநிலம் முழுதும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி, காமராஜர் நகர் தொகுதியில் நேற்று மாலை நடந்த விழாவில், தொகுதி தலைவர் ஜெயக்குமார், பொறுப்பாளர் பிரகாஷ் தலைமையில் 108 பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தொகுதி பொதுச் செயலாளர்கள் உதயகுமார், விஷ்ணு பிரசாத் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ரவிச்சந்திரன் சரவணன், ஹேமமாலினி, ஜிஹர்ஜி தேவா, மகாவீர், மாவட்ட தலைவர் உலகநாதன், மாவட்ட பொது செயலாளர் ரமணசங்கர், மாவட்ட துணை தலைவர் செல்வகுமார், பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

