நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : காமராஜர் அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது.
என்.சி.சி., தரைப்படை பிரிவு, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனை ரத்த வங்கி இணைந்து நடத்திய முகாமிற்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார்.
என்.சி.சி., தரைப்படை பிரிவு லெப்டினன்ட் கதிர்வேல், ஹவில்தார்கள் ஆனந்தன், நவீன்குமார் முன்னிலை வகித்தனர். என்.சி.சி., மாணவர்கள் வரவேற்றனர்.
அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். இந்திரகாந்தி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.

