
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை ; பெரியபாபுசமுத்திரம் துணை சுகதார நிலையத்தில் ரத்த தான முகாம் நடந்தது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில், நடந்த முகாமை கண்டமங்கலம் வட்டார மருத்துவ அதிகாரி ஆர்த்தி துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ரஞ்சிதம் பாலக்கிருஷ்ணன், ஊராட்சி துணை தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தனர்.
சுகாதார ஆய்வாளர் சுடர் வரவேற்றார்.
கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கவுதம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் பகுதி சுகாதார செவிலியர் இந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் ரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சுகாதார செவிலியர் இந்திரா நன்றி கூறினார்.

