ADDED : ஆக 29, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பாரதி புத்தகாலயம் சார்பில், நடத்தப்படும் புத்தக திருவிழா 27ம் தேதி துவங்கியது.
லாஸ்பேட்டை விளிப்பு நிலை வாழ்வாதார மையத்தில் துவங்கிய புத்தக திருவிழாவை, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் ராஜாவேலு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அமைச்சர் சிவகொழுந்து, மாகே எம்.எல்.ஏ., அசோக்குமார், முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இப்புத்தக திருவிழா, வரும் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாரதி புத்தகாலயத்தின் ஒங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் செய்து வருகின்றனர்.
