/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போர்வெல் அமைக்கும் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
போர்வெல் அமைக்கும் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
போர்வெல் அமைக்கும் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
போர்வெல் அமைக்கும் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : டிச 16, 2025 05:43 AM

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பத்தில் ரூ.38.65 லட்சம் செலவில் புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று துவக்கிவைத்தார்.
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை, பொது சுகாதாரக் கோட்டத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் கிராமம் மற்றும் அதனை சார்ந்த பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.38.65 லட்சம் செலவில் ஜெ.எம்.ஜெ., கார்டன் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கிவைத்தார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் நிலை-2 சுந்தரமூர்த்தி, பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் பக்தவச்சலம், கிராம குடிநீர் திட்ட உதவிப்பொறியாளர் சிவானந்தம், இளநிலைப் பொறியாளர் கார்த்திக், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர், மனோகரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

