/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா
ADDED : நவ 24, 2024 04:34 AM
புதுச்சேரி : புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா நாளை துவங்கி 4 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து முதன்மை பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா நாளை (25ம் தேதி) முதல் 28ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.
இதற்காக, மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அருகில், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி, கரியமாணிக்கம், அரும்பார்த்தபுரம், மதகடிப்பட்டு, வில்லியனுார், ஏம்பலம், லாஸ்பேட், மடுவு பேட் ஜங்ஷன், கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய சிம் கார்டு வாங்குபவர்களுக்கு மற்றும் பிற நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல்.,க்கு வருபவர்களுக்கு 4ஜி சிம் இலவசமாக தரப்படும்.
தற்போதுள்ள 2ஜி, 3ஜி சிம் வைத்திருப்பவர்கள் 4ஜி சிம்மாக இலவசமாக மேம்படுத்தி கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி இலவச டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றிய விபரம் அறிந்து கொள்ள 94428 24365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

