sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஸ்டுடியோவில் ரூ.2 லட்சம் கேமராக்கள் திருட்டு

/

 ஸ்டுடியோவில் ரூ.2 லட்சம் கேமராக்கள் திருட்டு

 ஸ்டுடியோவில் ரூ.2 லட்சம் கேமராக்கள் திருட்டு

 ஸ்டுடியோவில் ரூ.2 லட்சம் கேமராக்கள் திருட்டு


ADDED : நவ 16, 2025 11:10 PM

Google News

ADDED : நவ 16, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராக்களை திருடிச் சென்ற மர்ம நபர் களை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம், சுப்பையா நகரை சேர்ந்தவர் அன்பரசன் 38; காட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவர், கடந்த 14ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது, கடையின் ஷட்டரில் உள்ள 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கண்ணாடி கதவும் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கேமராக்கள், 5 ஆயிரம் ரொக்கம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, தடங்களை சேகரித்தனர்.

இது குறித்து அன்பரசன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us