/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதட்சனை கேட்டு கொடுமை கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
/
வரதட்சனை கேட்டு கொடுமை கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
வரதட்சனை கேட்டு கொடுமை கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
வரதட்சனை கேட்டு கொடுமை கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
ADDED : மார் 05, 2024 05:10 AM
புதுச்சேரி: வரதட்சனை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காராமணிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ், இவரது மனைவி ரூபிணி, 35; இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, பெண் வீட்டில் இருந்து 15 சவரன் தங்க நகைகள் மற்றும் சீர் வரிசை பொருட்களுடன் கொடுத்தனர்.
மேலும், மாப்பிளை வீட்டில் இருந்து கடை நடத்துவதற்கு பல லட்சம் பணம் பெற்றுள்ளனர். மேலும் கணேஷ் வாங்கிய கடன்களை அவரது மனைவி அடைத்துள்ளார்.
இந்நிலையில், மேலும், வரதட்சனையாக பணம் கேட்டு, ரூபிணியை கணவர் கணேஷ், அவரது தந்தை முத்துகுமாரசாமி, தாய் அருள்மொழி ஆகியோர் கொடுமைபடுத்தி , மிட்டியுள்ளனர். ரூபிணி புகாரின் பேரில் புதுச்சேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

