ADDED : நவ 08, 2024 04:55 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் 66, இவரது மகன் வாஞ்சிநாதன் 35, இவர் நேற்று முன்தினம் மாலை அவரது மனைவி கலைவாணியிடம் தகராறில் ஈடுப்பட்டு தாக்கினார். இதனை தட்டிக்கேட்ட ஜெகன்நாதனை ஆபாசமாக பேசி, அங்கிருந்த டைல்ஸ் கல்லால் தலையில் தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த ஜெகன்நாதன் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின் இதுதொடர்பாக கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
