sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவிக்கு வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

/

மனைவிக்கு வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

மனைவிக்கு வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

மனைவிக்கு வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 10, 2025 08:35 AM

Google News

ADDED : ஆக 10, 2025 08:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பம், வானவில் நகரை சேர்ந்தவர் செண்பகம், 37. இவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் குணசேகரன், 40; என்பவருக்கும் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அப்போது, செண்பகம் வீட்டார், வரதட்சணையாக 25 சவரன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு பின், கணவருடன் வெளிநாட்டிற்கு செல்ல, செண்பகம் மேலும் ரூ.5 லட்சம் பெற் றோரிடம் வாங்கி கொடுத்துள்ளார்.

இருப்பினும், அவரை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாமல், கணவர் குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு, செண்பகத்தை அடித்து துன்புறுத்தி வந்தனர்.

செண்பகம் அளித்த புகாரின் பேரில், கணவர் குணசேகரன், மாமியார் சாந்தி, உறவினர்கள் குணசுந்தரி, குணசெல்வி, திருவேங்கடசாமி ஆகியோர் மீது அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us