sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபருக்கு கத்தி வெட்டு ஓட்டல் ஊழியர் மீது வழக்கு

/

வாலிபருக்கு கத்தி வெட்டு ஓட்டல் ஊழியர் மீது வழக்கு

வாலிபருக்கு கத்தி வெட்டு ஓட்டல் ஊழியர் மீது வழக்கு

வாலிபருக்கு கத்தி வெட்டு ஓட்டல் ஊழியர் மீது வழக்கு


ADDED : மே 06, 2025 05:04 AM

Google News

ADDED : மே 06, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வாலிபரை கத்தியால் வெட்டிய ஓட்டல் ஊழியர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உருளையன்பேட்டை, சஞ்சய் காந்தி நகரை சேர்ந்தவர் பிரபாகரன், 38; தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது தாய் பானுமதி, காமராஜர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

தினமும் ஓட்டல் வேலை முடிந்து, தாய் பானுமதியை இரவு 11:00 மணிக்கு பிரபாகரன் சென்று அழைத்து வருவது வழக்கம். அதுபோல், கடந்த 2ம் தேதி இரவு தாய் பானுமதியை அழைத்து வர ஓட்டலுக்கு பிரபாகரன் சென்றுள்ளார். அப்போது, பிரபாகரனை அந்த ஓட்டலில் பணிபுரியும் மாஸ்டர் ஆறுமுகம் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை பிரபாகரன் தட்டி கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், கோபமடைந்த ஆறுமுகம் கையில் வைத்திருந்த கத்தியால், பிரபாகரனை வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த பிரபாகரனை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் ஆறுமுகம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us