/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : பிப் 09, 2026 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தொண்டமாநத்தம் அரசு பள்ளி வீதியைச் சேர்ந்தவர் வானதி, 26. இவர், கடலுார் மாவட்டம், கீழ் குமாரமங்கலம் வினித்குமார் 29, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வானதி 5 மாதம் கர்ப்பிணி. இதனால் அவரது தாய் வீட்டில் வானதி வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் வானதி வீட்டிற்கு சென்ற வினித்குமார், வானதியை சரமரியாக தாக்கி விட்டு, அங்கிருந்து சென்றார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

