sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணிடம் நகை, பணம் ஏமாற்றியவர் மீது வழக்கு

/

பெண்ணிடம் நகை, பணம் ஏமாற்றியவர் மீது வழக்கு

பெண்ணிடம் நகை, பணம் ஏமாற்றியவர் மீது வழக்கு

பெண்ணிடம் நகை, பணம் ஏமாற்றியவர் மீது வழக்கு


ADDED : மே 11, 2025 11:27 PM

Google News

ADDED : மே 11, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பெண்ணிடம் நகை, பணத்தை பெற்று கொண்டு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முதலியார்பேட்டை, உழந்தை கீரப்பாளையம், புவன்கரே வீதியை சேர்ந்தவர் நித்யா, 39; மார்க்கெட்டிங் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்ட். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது மகள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.

கடந்த 2024 ஆண்டு ஜூலை மாதம் வேல்ராம்பட்டை சேர்ந்த அஜித் என்பவர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது தொடர்பாக நித்யாவிடம் பேசியுள்ளார். நித்யாவிடம் இன்சூரன்ஸ் போடுவதாக கூறி தொடர்ந்து பேசி பழகியுள்ளார்.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் அஜித், தொழில் துவங்குவதற்காக தனது தந்தை அளித்த 20 லட்சம் ரூபாயை செலவழித்து விட்டதாகவும், அதனை தந்தையிடம் கூறினால், அவர் தற்கொலை செய்து கொள்வார். ஆகையால், அந்த பணத்தை ஈடு செய்யும் வகையில், நித்யாவிடம் பணம் மற்றும் நகை இருந்தால் தரும்படி கேட்டுள்ளார்.

இதை நம்பிய நித்யா பல்வேறு தவணைகளாக அஜித்திடம் ஐந்தரை சவரன் நகை மற்றும் ரூ.47 ஆயிரத்து 500 பணம் கொடுத்துள்ளார். நகை மற்றும் பணத்தை நித்யா திரும்ப கேட்டபோது, அஜித் அவரை, திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.

நித்யா அளித்த புகாரின் பேரில் அஜித் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us