sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வாலிபர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு  பதிவு

/

 வாலிபர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு  பதிவு

 வாலிபர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு  பதிவு

 வாலிபர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு  பதிவு


ADDED : பிப் 23, 2026 04:19 AM

Google News

ADDED : பிப் 23, 2026 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: முன்விரோதத்தில், வாலிபரை தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாகூர் அடுத்த குருவிநத்தம் வானக்கார தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண், 24; பாகூரில் பரிசு பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவர், ஒரு பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன், சின்னக்கரையாம்புத்துாரை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர், அருணுக்கு போன் செய்து, அதே பெண்ணை தான் காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனிடையே, அருண் கடந்த ஒரு மாதத்திற்கு முன், உடற்பயிற்சி செய்வதற்காக கடலுார் விளையாட்டு மைதானத்திற்கு சென்ற போது, அங்கு ஸ்ரீராம் மற்றும் தான் காதலித்த பெண்ணும் ஒன்றாக இருப்பதை பார்த்தார்.

அருண், அப்பெண்ணிடம் நியாயம் கேட்ட போது, ஸ்ரீராமுக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கு, இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.

கடந்த 15ம் தேதி அருண் கடையில் தனியாக இருந்தபோது, ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து, அருணிடம் தகராறு செய்து, தாக்கி மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.

காயமடைந்த அருண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது புகாரின் பேரில், ஸ்ரீராம் மற்றும் சின்ன கரையாம்புத்துார் பாண்டுரங்கன், இருளன்சந்தை கிஷோர், பாகூர் ஆதி ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us