தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு

அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு

அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு


ADDED : டிச 01, 2024 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு மிரட்டல் விடுத்த அரசு ஊழியர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

புதுச்சேரி திருபுவனை (தனி) தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன். இவரை, கடந்த 26ம் தேதி மொபைல் போனில், அரசு ஊழியர் உளவாய்க்கால் சந்திரசேகரன் என்பவர் தொடர்பு கொண்டார்.

அப்போது, 'கடந்த தேர்தலில் எங்கள் தயவால் நீ எம்.எல்.ஏ.,வாக தேர்வானாய்' என, ஒருமையில் பேசினார்.

கடந்த 17ம் தேதி காமராஜர் தொகுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில், லாட்டரி அதிபர் மகன் காலில் அங்காளன் எம்.எல்.ஏ, விழுந்தது குறித்து அவதுாறாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக அங்காளன் எம்.எல்.ஏ., திருபுவனை போலீசில் புகார் அளித்தார். சந்திரசேகரன் மீது அவதுாறு பேசுதல், கொலை மிரட்டல், இரு குழுக்களுக்கு இடையில் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us