/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு பதிவு
/
பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு பதிவு
ADDED : பிப் 01, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் அய்யனார், 40. இவரது உறவினர் மடுவுபேட், மாரியம்மன் கோவில் வீதி குமரன், 32. என்பவருக்கு கடந்த 2021ல் 9 லட்சம் கடன் கொடுத்தார்.
கடனை அய்யனார் பலமுறை கேட்டும் தரவில்லை. குமரன் கடன் வாங்கியது குறித்து, அவரது குடும்பத்தினரிடம் அய்யனார் கூறினார். கோபமடைந்த குமரன் கடந்த 5ம் தேதி அய்யனார் வீட்டில் சென்று, அங்கிருந்த மணிபிளாண்ட் கண்ணாடி பாட்டிலால், அய்யனார் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். அய்யனார் புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.