ADDED : மார் 21, 2026 04:19 AM
காரைக்கால்: காரைக்காலில் தேர்தல் விதிகளை மீறி பொது இடத்தில் விளம்பர சுவரொட்டி ஒட்டிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் ஐந்து சட்டசபை தொகுதிகளில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட தேர்தல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் அகற்றும் பணி மற்றும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தேர்தல்துறை பறக்கும் படை அதிகாரி மாரிச்சாமி ரோந்துப்பணியில் ஈடுப்பட்டபோது, கல்லாரைப்பேட்டை பகுதியில் ஒரு தனியார் குடியிருப்பு வெளிப்புறச் சுவரில் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் விளம்பர சுவரொட்டியில் எம்.எல்.ஏ., மற்றும் முதல்வர் படம் இடம் பெற்றுள்ளது.
இதுக்குறித்து நகர காவல் நிலையத்தில் தேர்தல் பறக்குப்படை அதிகாரி மாரிச்சாமி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விளம்பரம் சுவரொட்டி வைத்த கல்லாரைப்பேட் பகுதியை சேர்ந்த கண்ணப்பன், 44, என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தேர்தல் விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர சுவரொட்டியை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்.
