/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு
/
பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 24, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் புறவழிச் சாலையில், அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சாலையில் அனுமதியின்றி, பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஜெயராஜ், கடலுார் சாலையில் நேற்று ஆய்வு செய்தனர். அரியாங்குப்பம் புறவழிச்சாலை சிக்னல் அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, உதவிப்பொறியாளர், அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பேனர் வைத்த அரசியல் கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.