ADDED : ஜூலை 11, 2025 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையன்பேட்டை, இளங்கோ நகரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை நேரு எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.
உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகர் 2வது பிரதான சாலையில், புதுச்சேரி நகராட்சி மூலம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.32 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை மற்றும் இருபுற கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது.
தொகுதி எம்.எல்.ஏ., நேரு, சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இதில், புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் குப்புசாமி, அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.