/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4ம் தேதி எஸ்.ஐ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
/
4ம் தேதி எஸ்.ஐ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
ADDED : பிப் 25, 2026 05:28 AM
புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 4ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 22ம் தேதி நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு வெளியான மற்றொரு அறிவிப்பில், சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி ஆலோசனை கூடத்தில் வரும் 4ம் தேதி காலை 8:30 மணி முதல் நடக்கிறது.
தேர்வானவர்கள் தங்களின் பிறப்பு, கல்வி, குடியிருப்பு, சாதி மற்றும் வருமான சான்றிதழ்கள் அசலை எடுத்து வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு https://police.py.gov.in இணையதளத்தில் பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்.
தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பத்தாரர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 27ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.

