sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் காரை ஓட்டி பைக்குகளை சேதப்படுத்திய சென்னை டிரைவர் கைது: ஓட்டுனர் உரிமத்தை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரை

/

போதையில் காரை ஓட்டி பைக்குகளை சேதப்படுத்திய சென்னை டிரைவர் கைது: ஓட்டுனர் உரிமத்தை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரை

போதையில் காரை ஓட்டி பைக்குகளை சேதப்படுத்திய சென்னை டிரைவர் கைது: ஓட்டுனர் உரிமத்தை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரை

போதையில் காரை ஓட்டி பைக்குகளை சேதப்படுத்திய சென்னை டிரைவர் கைது: ஓட்டுனர் உரிமத்தை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரை


ADDED : மே 21, 2025 10:34 AM

Google News

ADDED : மே 21, 2025 10:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் மது போதையில் காரை ஓட்டிச்சென்று சாலையோரம் நிறுத்தியிருந்து பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சென்னையை சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுச்சேரி போக்குரவத்து சீனியர் எஸ்.பி., பிரவின்குமார் திரிபாதி செய்திக்குறிப்பு: சென்னை, சூளைமேடு, கிருஷணாபுரம் தெருவைச் சேர்ந்த இஸ்ரேல் செல்வராஜ் மகன் லெவிஸ் ஜெரோம் சைரஸ், 23; டிரைவர். இவர், மது போதையில் கடந்த 18ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில், புதுச்சேரி, இ.சி.ஆர்., லாஸ்பெட், எம்.ஜி.ஆர்., ரெசிடென்சிக்கு எதிரே, ஓட்டிச் சென்ற பி.எம்.டபள்யூ., கார் (டி.என். 07-டி.பி.-5689) மோதி சாலையோரம் நிறுத்தியிருந்த 8 பைக்குகள் சேதமாகின.

இது குறித்து புதுச்சேரி வீட்டு வசதி வாரியம், ஜவஹர் நகரை சேர்ந்த கிறிஸ்டியன்,32; புகாரின் பேரில் புதுச்சேரி போக்குவரத்து காவல் நிலையம் (வடக்கு) போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். காரின் டிரைவர் லெவிஸ் ஜெரோம் சைரஸின் ரத்த மாதிரிகள் புதுச்சேரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆல்கஹால் அளவு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன.

மேலும் ஆல்கஹால் கருவி மூலம் குற்றம் சாட்டப்பட்டவரின் மூச்சி காற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 127.5 மிகி/100 மிலி அளவைக் கொண்டிருந்தது. இதனையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ஆறு மாத காலத்திற்கு இடைநிறுத்தம் செய்ய சென்னை, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us