/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்னை டவர் கிளப் சூப்பர்வைசர் புதுச்சேரியில் உயிரிழப்பு போலீசார் விசாரணை
/
சென்னை டவர் கிளப் சூப்பர்வைசர் புதுச்சேரியில் உயிரிழப்பு போலீசார் விசாரணை
சென்னை டவர் கிளப் சூப்பர்வைசர் புதுச்சேரியில் உயிரிழப்பு போலீசார் விசாரணை
சென்னை டவர் கிளப் சூப்பர்வைசர் புதுச்சேரியில் உயிரிழப்பு போலீசார் விசாரணை
ADDED : செப் 05, 2025 02:56 AM
பாகூர்: சென்னை டவர் கிளப் சூப்பர்வைசர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, பாகூர் மகா கணபதி நகரை சேர்ந்தவர் சுசீலா. இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் சுரேஷ் 47; அருப்புகோட்டை எஸ்.பி.ஐ., வங்கி மேலாளர். இரண்டாவது மகன் சதீஷ் 45; சென்னை டவர் கிளப்பில் சூப்பர்வைசர். மூன்றாவது மகன் சீதாராமன் 43; ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். கணவர் பத்மநாபன் இறந்து விட்ட நிலையில், சுசிலா மட்டும் பாகூரில் தனியாக வசிக்கிறார்.சென்னையில் உள்ள தனது மகன் சதீஷ் வீட்டில், சில நாட்கள் தங்கி இருந்து சுசீலா கடந்த 27ம் தேதி பாகூருக்கு வந்தார். அவருக்கு, உடல் நிலை சரியில்லாமல் போனதால், அரவது மகன் சதீஷ் உடனிருந்து கவனித்து வந்தார். சதீஷ் ஏற்கனவே, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில், தாயின் உடல் நிலையை கண்டு, மனவேதனை அடைந்து மது குடித்து வந்தார்.
கடந்த 2ம் தேதி இரவு சதீஷ், மன அழுத்தத்திற்கு போடும் மாத்திரையை அளவுக்கு அதிகமாக போட்டுக் கொண்டு படுத்து விட்டார். மறுநாள் காலை அம்மாவை பார்ப்பதற்காக, மதுரையில் இருந்து வந்திருந்த சுரேஷ்,துாங்கி கொண்டிருந்த சதீஷை எழுப்பி டீ கொடுத்தார். அவர், டீ குடித்து விட்டு மீண்டும் படுத்து கொண்டார். சதீஷ் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்காதால், அவரது தாய் சுசிலா, வெளியே சென்றிருந்த சுரேஷிக்கு தகவல் தெரிவித்தார்.உடனே, சுரேஷ் 108 ஆம்புலன்ஸ் மூலம், சதீஷை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். சுரேஷ் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால், இறந்தாரா. குடிபோதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, விசாரணை நடத்தி வருகின்றனர்.