/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் செஸ் போட்டி
/
வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் செஸ் போட்டி
ADDED : பிப் 09, 2026 05:01 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஹெரிட்டேஜ் ரவுண்ட் டேபிள் -167 சார்பில், வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் 17 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டி நடந்தது.
பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.பரிசளிப்பு விழா நடந்தது. சீனியர் எஸ்.பி., நித்தியா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
வாசவி இண்டர்நேஷனல் பள்ளி சேர்மன் வேணுகோபால், பள்ளி முதல்வர் மாரிமுத்து, ரவுண்டேபிள் 167 சேர்மன் மோத்திகுமார், செயலாளர் பாலாஜி, பெருளாளர் ஜெயந்த், உறுப்பினர் அசோக், ஒருங்கிணைப்பாளர்கள் கெவின், பால விஸ்வேஷ்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் அமிர்தா பள்ளி மாணவி ஜீவிகா முதல் பரிசு பெற்றார். அவருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. ஆதித்தியா குருகிராம் பள்ளி மாணவர் ஜஸ்டின் சாமுவேல் ரெபிலோ 2ம் பரிசு பெற்றார். அவருக்கு 30 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் ராகுல் ராமகிருஷ்ணன் 3ம் பரிசு பெற்றார். அவருக்கு 20 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.

