ADDED : ஜூலை 07, 2026 04:56 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கல்வீடு கட்டும் திட்டத்தில், மங்கலம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமி 51 பயனாளிகளுக்கு ஆணையை வழங்கினார்.
காமராஜர் கல்வீடு திட்டம் மற்றும் ( பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0) கீழ் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம், மங்கலம் தொகுதியில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் வீதம் 51 பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், என்.ஆர்., காங்., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
