sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சாதனை

/

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சாதனை

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சாதனை

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சாதனை


ADDED : அக் 31, 2025 02:44 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

போட்டியில் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லுாரி மாணவர் சுமிதுன்ராஜ் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு பெற்றார். ஜூடோ மற்றும் குத்துச்சண்டை போட்டியில் முகேஷ், பாண்டி, சஞ்சய் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றனர்.

இதேபோல், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பலக்கலைக்கழகம் சார்பில் மாநில அளவிலான மகளிர்கான கூடைப்பந்து போட்டி, சேலம் சாரதா உடற்கல்வியியல் கல்லுாரியில் நடந்தது.

அதில், 12 அணிகள் பங்கேற்ற போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லுாரி அணி முதலிடம் பிடித்து கோப்பை வென்றது.

சென்னை ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான ஆடவர் கால்பந்துப் போட்டியில் இக்கல்லுாரி அணி 2ம் இடம் பெற்றது. குத்துச்சண்டை போட்டியில் சஞ்சய், பாலாஜி, கவுதம், சிசாவரதன் ஆகியோர் முதலிடத்தையும், பைசல் ரகுமான், யோகித்ராஜ் 2ம் இடம் பிடித்தனர்.

போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டினார். இதில், உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் மற்றும் உதவி பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us