/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ருசி' ஐஸ்கிரீமை ருசித்த மழலைகள்
/
'ருசி' ஐஸ்கிரீமை ருசித்த மழலைகள்
ADDED : பிப் 01, 2026 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியினை பார்வையிட வந்த மழலைகள் 'ருசி' பால் ஸ்டாலில் ஐஸ்கிரீம்களை வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் வேளாண் விழா மற்றும் மலர், காய், கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று கண்காட்சியில் மழலைகள் மலர்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பின் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 'ருசி' பால் ஸ்டாலில் வித விதமான ஐஸ்கிரீம் வகைகளை வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர்.

