நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கார்த்திக்கை தீபத்தை முன்னிட்டு, மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சொக்கப்பானை ஏற்றப்பட்டது.
நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் உள்ள மரக்காளீஸ்வரர் கோவிலில் பிரோதஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 9.00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
தொடர்ந்து நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
பின் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பானை ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகர் வீதியுலா நடந்தது.
இதில் திரளான பக்தர்கர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

