/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் சினிமா சூட்டிங் சந்தானம், அருள்நிதி, ஜீ.வி.பிரகாஷ் படங்களின் படப்பிடிப்பு துவக்கம்
/
ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் சினிமா சூட்டிங் சந்தானம், அருள்நிதி, ஜீ.வி.பிரகாஷ் படங்களின் படப்பிடிப்பு துவக்கம்
ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் சினிமா சூட்டிங் சந்தானம், அருள்நிதி, ஜீ.வி.பிரகாஷ் படங்களின் படப்பிடிப்பு துவக்கம்
ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் சினிமா சூட்டிங் சந்தானம், அருள்நிதி, ஜீ.வி.பிரகாஷ் படங்களின் படப்பிடிப்பு துவக்கம்
ADDED : ஜன 15, 2025 12:18 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு சினிமா மற்றும் வெப் சீரீஸ் படப்பிடிப்புகள் மீண்டும் 17 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக புதுச்சேரி பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இதற்கு ஒயிட் டவுனில் அழகிய வீடுகள், வீதிகள், கடற்கரை பகுதி, லாஸ்பேட்டை விமான நிலையம், சுண்ணாம்பாறு, ரோடியர், சுதேசி மில் வளாகம் மற்றும் புதுச்சேரி அருகில் தமிழகப்பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதி ஆகியவை படப்பிடிப்புகளுக்கு ஏற்ற தளமாக விளங்குகிறது.
மேலும் திரைப்பட கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர்கள் தங்குவதற்கு ஏற்ற ஆடம்பர ஹோட்டல்கள், துணை நடிகர், நடிகைகள், படப்பிடிப்பு குழுவினர்கள் குழுவாக தங்குவதற்கு விலை குறைந்த தங்கும் விடுதிகள், உணவகங்கள் குறைந்த விலையில் தாராளமாக கிடைக்கும் மது வகைகள், குறைந்த விலை டீசல் ஆகியவை காரணமாக தமிழகத்தை விட புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த பலரும் விரும்புகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் புதுச்சேரியில் திரைப்பட படப்பிடிப்புக்கான கட்டணம் நாளொன்றுக்கு அனைத்து வரிகளும் உட்பட ரூ.28,000 ஆயிரம், வெப் சீரீஸ் படப்பிடிப்புகளுக்கான கட்டணம் அனைத்து வரிகளும் உட்பட ரூ.14,000 ஆயிரம் என உயர்த்தப்பட்டது.
இதனால் புதுச்சேரியில் கடந்த ஆறு மாதமாக திரைப்படங்களின் படப்பிடிப்பும் நடைபெறாமல் நின்று போனது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விஜய்சேதுபதி உள்பட நடிகர்கள் பலர் படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினர். இந்நிலையில், கடந்த ஆண்டு டிச. மாதம் திரைப்பட படப்பிடிப்பிற்கு வரிகள் உள்பட 18,700 ரூபாய் வெப்சீரிஸ்க்கு படப்பிடிப்பிற்கான வரிகள் உள்பட 12, 300 ரூபாய் என கட்டணத்தை அரசு குறைத்தது.
அதையொட்டி வரும் 17ம் தேதி முதல் நடிகர்கள் சந்தானம், அருள்நிதி,ஜீ.வி பிரகாஷ் ஆகியோரின் படப்பிடிப்புகள் வரிசையாக தொடங்க உள்ளது. இதனால் உள்ளூர் சினிமா சூட்டிங் மேனேஜர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.