sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி சுற்றுலா சைக்கிள் நிறுவனத்தில் சிக்கிய ரூ.2.45 கோடியை கஜானாவில் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

/

புதுச்சேரி சுற்றுலா சைக்கிள் நிறுவனத்தில் சிக்கிய ரூ.2.45 கோடியை கஜானாவில் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

புதுச்சேரி சுற்றுலா சைக்கிள் நிறுவனத்தில் சிக்கிய ரூ.2.45 கோடியை கஜானாவில் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

புதுச்சேரி சுற்றுலா சைக்கிள் நிறுவனத்தில் சிக்கிய ரூ.2.45 கோடியை கஜானாவில் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு


ADDED : ஏப் 05, 2025 04:15 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரபல சுற்றுலா சைக்கிள் நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ.2.45 கோடி பணம் சிக்கியது குறித்து சைபர் கிரைம் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரிக்கு அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை குறி வைத்து சுற்றுலா சைக்கிள் நிறுவனங்கள் புதுச்சேரியில் அதிகரித்து வருகின்றன. அதில், சில நிறுவனங்கள், பொது மக்களை சுற்றுலா சைக்கிள் திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து, மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, காமராஜர் சாலையில் இயங்கி வரும் பிரபல சுற்றுலா சைக்கிள் நிறுவனத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், கணக்கில் வராத ரூ.2.45 கோடி சிக்கியது.

அதனைத் தொடர்ந்து தாசில்தார் பிரித்திவி தலைமையிலான வருவாய் துறையினர் முன்னிலையில் பணம் சில ஆவணங்களை பறிமுதல் செயது, நிறுவனத்தி சீல் வைத்தனர்.

தொடர் விசாரணையில், இந்நிறுவனம் பெங்களூருவில் கடந்த 2018 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதும், இந்நிறுவனம் புதுச்சேரியில் தனி நபர் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு மாதம் ரூ. 52,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். பின்னர், 9 மாதங்கள் கழித்து அவர் கட்டிய ரூ. 4.5 லட்சம் பணத்தை பெற்று கொள்ளலாம் எனக் கூறி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை உறுப்பினர்களாக சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதன்பேரில், புதுச்சேரியில் இந்நிறுவனம் செயல்பட அனுமதி பெற்றுள்ளதா என்பது குறித்தும், எத்தனை பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். அவர்களிடம் பெறப்பட்ட முதலீடு பணத்தை எதில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

மேலும், நேற்று முன்தினம் இரவு நடந்த சோதனை குறித்த அறிக்கையை கலெக்டருக்கு சமர்பித்தனர்.

இதுகுறித்து கலெக்டர் குலோத்துங்கனிடம் கேட்டபோது, பணம் கைப்பற்றியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு பிறகே முழுவிபரம் தெரிய வரும் என்றார்.

இதனிடையே கணக்கில் வராத ரூ.2.45 கோடி பணம் சிக்கியது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us